Tuesday, January 6, 2009

இது தாண்டா உலகம்... !...?

வணக்கமுங்க,

நமது உலகம் ஆள், உருவம், தோற்றம், வடிவு, உடை, ஆபரணம், பகட்டு மற்றும் பொலிவிற்கு கொடுக்கும் மரியாதையை சாதாரண மனிதனுக்கு கொடுப்பதில்லை. என்று இந்த உலகம் மனிதனை மனிதனாக பார்க்க போகிறது, அவன் தரித்துள்ள போலி வேடங்களை கலைந்து. எதில் நாம் வேறுபட்டு இருந்தாலும் இந்த விடயத்தில் நாம் அனைவரும் ஒன்றாகவே உள்ளோம். நமக்கு இதில் அறிவோ, அறிவுரையோ இல்லை என்றோ, கம்மி என்றோ, சொல்லாதீர்கள். அதிலும் நம் தமிழ்ச் சமூகத்திற்கு மிக அதிகம்; அறிவும், அறிவுரைகளும்.

உலகப் பொதுமறையாம் வள்ளுவம் ஒதுகிறது.

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து.


அதாகப்பட்டது, உருவத்தை வைத்து நாம் யாரையும் ஏளனமாக பார்க்க கூடாது. இந்த இடத்தை நாம் உற்று நோக்கினால் ஒன்று புலப்படுகிறது அதுவும் தெளிவாகவே புலப்படுகிறது, உருவத்தை பார்த்து கேவலமாக எண்ணக் கூடாது என்றே சொல்கிறது. நீ உயர்வாய்க் கூட நினைத்துக் கொள் மோசமில்லை, ஆனால் துச்சமாக எண்ணாதே என்கிறார் வள்ளுவம் தந்த ஆசான். இதற்கு உவமையாய் கூறுகிறார், எவ்வளவு பெரிய தேராக இருந்தாலும் அதற்கு உருண்டு நகர் வலம் போக அளவில் சிறிதான, அழகு செய்ய தேவை இல்லாத, எப்போதும் இரும்பின்துகளையும் எண்ணையையும் கொண்ட கருமையான மையில் உழலும் அச்சாணி வேண்டும் என்று

இதை உணர்த்தும் விதமாக பல கதைகள் நான் கேள்விப்பட்டதுண்டு. ஆனால் இன்று அதை நான் நேரிலே காணும் பாக்கியம் பெற்றேன்.

எங்கள் அலுவலகத்திற்கு மிக அருகில் ஒரு பெட்டிக் கடை உண்டு. பிளாக் படித்து, எழுதி, ஆணி பிடுங்கி, அடித்து, மேலாளரிடம் வசவு வாங்கி "வொய் பிலட்?", "சேம் பிலட்?" என்று கிண்டல் செய்து கவலை மறக்கும் இடம் ஆகும் அது. அங்கு ஒரு பெரியவர் அழுக்கான உடை உடுத்தி, பார்க்கவே மிக அருவெறுப்பான தோற்றத்தில் வந்து இருந்தார். அவரை பார்த்த உடனேயே கடைக்காரார் அவரை விரட்டும் முகமாக." தூர போ.. தூர போ..தூர போ.." என்று விரட்டினார். இன்னும் சில பேரு அவரை கேலியும் கிண்டலும் செய்து கொண்டிருந்தனர். ஆனால் அவரை சரியாக கண்ட சிலபேரு "ஹேய்.. அவரு கடைக்கு சாமான் வாங்க வந்து உள்ளார்" என்று எடுத்து சொன்னார்கள். அவரும் கையில் உள்ள சில சில்லறைகளை கொடுத்து, ஒரு சாக்லேட் வாங்கி சாப்பிட்டு சென்றார்.

ஆனால் அதே நேரத்தில் ஒரு இளைஞன், மிக நேர்த்தியாக உடை அணிந்து மதக்குறிகள்லாம் இட்டு சில சிறிய விக்கிரகங்களை ஒரு தட்டில் வைத்து, ஒரு நன்கொடை புத்தகமும் வைத்து யாசித்து கொண்டிருந்தான். யாசித்து கொண்டே கடைக்கும் வந்தான். யாரும் அவனை ஒன்றும் சொல்லவில்லை. கடைக்காரரும் ஒன்றும் கொடுக்கவில்லை, அவனிடம் அதிகம் பேசாமல் அவனை அனுப்பி வைத்தார்.

அப்போ எனக்கு அந்த பெரியவரே கை எடுத்து கும்பிட தகுதியான, எனக்கு வாழ்க்கையை போதித்த கடவுளாக தெரிந்தார். ஆனால் அந்த இளைஞனின் தட்டில் உள்ள விக்கிரகங்கள் எல்லாம், நம்மை ஏமாற்றி நம் மீது ஏறிய அவன் வைத்து இருந்த கற்க் குவியலாகவே...

நன்றி.

மீண்டும் வருக,

நானும் வருவேன்...

4 comments:

நையாண்டி நைனா said...

வண்டி பரவாயில்லையே... நல்லா "கொட்டுதே"... இன்னும் நீங்கள் அதிகம் கொட்ட வேண்டும்

நையாண்டி நைனா said...

Hi... Me the FIRSTU

கூட்ஸ் வண்டி said...

Thanks for your comments and visit.

கார்த்திகைப் பாண்டியன் said...

இன்றைய நடைமுறை வாழ்வு இப்படித்தான் உள்ளது. மனிதருக்கு மரியாதை இல்லை. பகட்டும் பொய்யும் தான் இன்றைய உலகம். நல்ல பதிவு.