Thursday, March 5, 2009

பதில் சொல்வது எப்படி?

அது ஒரு இனிமையான... இல்ல ஒரு இக்கட்டானா... இல்ல இல்ல பொன் மா... இல்ல.. இல்ல.. ஒரு சோதனையா.... வேண்டாம், வேண்டாம், இப்ப வேண்டாம், முடிஞ்ச உடனே முடிவு பண்ணுவோம்.

வீட்டுக்குள்ளே நுழைஞ்சும், நுழையாம இருக்கும் போதே...

"இன்னிக்கி நான் அல்வா கிண்டி வச்சிருக்கேன் நீங்க சாப்டு பார்த்துட்டு சொல்லுங்க"

"சரீ.... கை கால் முகம் கழுவிட்டு வறே...ன், டேபிள்லே வைய்யி...."

"ஹா....ன், நல்லா இருக்கே..........! எதை? எதை...? பார்த்து செஞ்சே"

"ஏன்...? எங்களுக்கெல்லாம் தன்னாலே செய்ய தெரியாதோ? எதையாவது பார்த்து... இல்லை யாரவது சொல்லி கொடுத்தா தான் தெரியுமோ?"

"___________"

"இல்லே... நேற்று காலையிலே கொண்டுவந்து போட்டீங்களே அந்த பழைய பேப்பர் கட்டு, அதுலே ஒரு பேப்பர்லே இருந்துச்சு, அதிலே கொடுத்திருந்தாங்க அதை பார்த்து செஞ்சேன். உங்களுக்கு பிடிக்குமே என்று...."

" அப்படியா...! நல்லா இருக்கே... பஸ்டு செஞ்ச மாதிரியே இல்லை"

"சும்மா.... எனக்காக சொல்ல கூடாது.... உண்மையிலே எப்படி இருக்கு...?"

"உண்மையிலே நல்ல இருக்குப்பா... நான் ஏன் பொய் சொல்லணும்?"

"சும்மா... சும்மா எனக்காக சொல்லாதீங்க? உண்மைலே சொல்லுங்க"

"இன்னும் கொஞ்சம் பதமா, மெல்லுஸ இருந்தா இன்னும் சூப்பரா இருக்கும்... இப்ப கொஞ்சம் சுமாரா இருக்கு"

" அப்படில்லாம் சொல்லாதீங்க... நான் இதை செய்யவே எவ்ளோ கஷ்டபட்டேன் தெரியுமா?..... அடச்சே... இந்த ஆம்பிளைங்களே இப்படி தான், கஷ்டபட்டு செஞ்சி கொடுத்தா இப்படி தான் குத்தம் சொல்லிகிட்டே இருப்பாங்க... ஹ்ஹும்..."

" __ # * $* $* # ____ "


* * * * * *